Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ்சை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பஸ்சில் ஏறி ஓடிய டிரைவர்!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (19:17 IST)
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்த பஸ்சை பாதியில் நிறுத்திய டிரைவர் வேறு பஸ்சில் ஏறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பஸ் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் அதனை தாறுமாறாக ஓட்டியதாக தெரிகிறது. இதனால் பயணிகள் பலர் அவரை எச்சரித்துள்ளனர்.
 
அதன் பின்னரும் பஸ்சை டிரைவர் தாறுமாறாகவே ஓட்டியுள்ளார். இதையடுத்து திடீரென சாலையோரத்தில் பஸ்சை நிறுத்திவிட்டு, அந்த வழியாக சென்ற மற்றொரு அரசு பஸ்சில் ஏறி சென்று விட்டார். 
 
இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். பின்னர் பஸ் கண்டக்டர்  போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி மாற்று டிரைவர் அனுப்பும்படி தெரிவித்துள்ளார்.
 
சுமார் 2 மணி நேரம் கழித்து மாற்று டிரைவர் வந்து பஸ்சை இயக்கினார். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பின்வருமாறு கூறினர், டிரைவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லை. இதற்கிடையே பஸ்சை ஓட்டும்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
 
இதனால்தான் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி, மற்றொரு பஸ்சில் ஏறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார் என தெரிவித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments