Publish Date: Mon, 18 Jul 2022 (15:39 IST)
Updated Date: Mon, 18 Jul 2022 (15:43 IST)
தடையை மீறி பஸ் டே கொண்டாட்டம்: சென்னையில் பரபரப்பு
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் செய்து வருவதும் அதனை காவல்துறையினர் தடுத்து வருவதும் வழக்கமாக இருக்கிறது
இந்த நிலையில் இன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இன்று பஸ்டே கொண்டாடப்படுவதாக வெளியான தகவலையடுத்து பஸ்டே கொண்டாட கூடாது என காவல்துறை தடை விதித்திருந்தது
ஆனால் தடையை மீறி சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடியதையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து உடனடியாக மாணவர்களை கலைத்து வேறு பேருந்துகளில் அவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ்டே கொண்டாட்ட அட்டகாசம் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது