Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பஸ் கண்டக்டர்களுக்கு கொரோனா தொற்று! – பேருந்து சேவை நிறுத்தம்!

பஸ் கண்டக்டர்களுக்கு கொரோனா தொற்று! – பேருந்து சேவை நிறுத்தம்!
, திங்கள், 15 ஜூன் 2020 (10:48 IST)
திருவண்ணாமலையை சேர்ந்த பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தளர்வுகள் பல அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை செய்யாறு பகுதியிலும் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் செய்யாறு பேருந்து பணிமனையின் கீழ் பணிபுரியும் நடத்துனர்கல் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் செய்யாறு பணிமனை மூடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு செய்யாறு பகுதியில் பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை! – இன்றைய நிலவரம்!