Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி அருகே பேருந்து விபத்து - 22 பேர் படுகாயம்

திருச்சி அருகே பேருந்து விபத்து - 22 பேர் படுகாயம்

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (14:36 IST)
திருச்சி அருகே அரசு பேருந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்ற போது, முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
 
இந்த நிலையில், திடீரென லாரியின் பின்புறம், அரசு பஸ் மோதி, நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில்  பயணிகள் 22 பேர் படுகாயமடைந்தனர்.
 
தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments