Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி அருகே பேருந்து விபத்து - 22 பேர் படுகாயம்

திருச்சி அருகே பேருந்து விபத்து - 22 பேர் படுகாயம்

Advertiesment
அரசு பேருந்து விபத்து
, ஞாயிறு, 29 மே 2016 (14:36 IST)
திருச்சி அருகே அரசு பேருந்து விபத்திற்குள்ளானதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் அதிகாலை திருச்சி சிறுகனூர் பெட்ரோல் பங்க் அருகே பஸ் சென்ற போது, முன்னால் பெண்ணாடத்தில் இருந்து தேனி நோக்கி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.
 
இந்த நிலையில், திடீரென லாரியின் பின்புறம், அரசு பஸ் மோதி, நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில்  பயணிகள் 22 பேர் படுகாயமடைந்தனர்.
 
தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி