Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகள் சாலையில் கவிழ்ந்தன: மூன்று பேர் பலி

Webdunia
திங்கள், 10 ஜூன் 2019 (11:18 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிக்கு அடுத்துள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசு பேருந்துகள் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியே சூளகிரி என்ற பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  அந்த தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததாக தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த மற்றுமொரு அரசு பேருந்து முன்னால் சென்ற பேருந்தின் மீது மோதியது. பின்பு அந்த பேருந்தும் விபத்திற்குள்ளானது.

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட இந்த பேருந்து விபத்தில்,  ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் பத்து பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரியவருகிறது. இந்த விபத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments