Publish Date: Sun, 03 Sep 2017 (10:08 IST)
Updated Date: Sun, 03 Sep 2017 (10:13 IST)
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகே உள்ள தஞ்சை குளத்தெருவில் உள்ள ஒரு மூன்றடுக்கு மாடு கட்டிடம் இடிந்து விழந்ததில், இரு உயிர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நேற்று திருச்சியில் கனத்த மழை பொழிந்தது. இதனால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 3 குடும்பத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். எனவே, போலீசாரும், பொதுமக்களும், மீட்புப்படையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் இதுவரை 6 பேரை போலிசார் மீட்டுள்ளனர். அதில், தந்தையும், மகனுமான கார்த்திக்(45), ஹரீஸ் (6) ஆகியோர் மருத்துவமனையில் இறந்துவிட்டனர். ஹரீஸின் தாய் உட்பட மற்ற 3 பேர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், அவர்களை உயிரோடு மீட்கும் பணிகளில் 100க்கும் மேற்பட்ட மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.