Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும்; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2018 (12:08 IST)
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். 
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கில், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும் திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில், புதுச்சேரியில் அரசு சார்பாக சட்டமன்ற வளாகத்தில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதன்பின் திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படம் வைத்து மலர் மாலை அணிவித்தனர்.
 
அதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய அமைச்சரவை கூட்டத்தில் திமுக தலைவர் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 7ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு புதுச்சேரி அரசு துக்கம் அனுசரிக்கும் என முதல்வர் கூறினார். செய்தியாளர் சந்திப்பில், மெரினாவில் திமுக தலைவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் புதுச்சேரியில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு வெண்கல சிலை வைக்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments