Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் கிலோ 30 ரூபாய்; சிக்கன் வறுவல் இலவசம் – கோழி வியாபாரிகள் அதிரடி ஆஃபர்!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (09:29 IST)
கோழிக்கறி உண்பதால் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தியால் மக்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்து வரும் நிலையில் புதிய உத்தியை கோழிக்கறி வியாபாரிகள் தொடங்கியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கோழிக்கறி சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக வெளியான வதந்தியால் மக்கள் கோழிக்கறி வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி விலை மிகவும் சரிந்துள்ளது. ஒரு கிலோ கோழிக்கறி 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. ஆனாலும் மக்கள் கோழிக்கறி வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

இதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோழி வியாபாரிகள் கோழிக்கறி வாங்க வருபவர்களுக்கு சிக்கன் வறுவல், பிரியாணி போன்றவற்றை இலவசமாக வழங்க தொடங்கியுள்ளனர். மேலும் சில இடங்களில் பிரியாணி கடைகளே 5 ரூபாய்க்கு பிரியாணி போன்ற ஆஃபர்களையும் அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments