Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'' பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்'' ! தமிழக அரசு அரசாணை வெளியீடு

'' பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்'' ! தமிழக அரசு அரசாணை வெளியீடு
, வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  காலை  நேரத்தில் சிற்றுண்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.

இந்த திட்டத்தின்படி,  முதலில் மாநகராட்சி,  நகராட்சி, தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது,.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமைச்சர் இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதன் முதற்கட்டமாக தமிழகத்திலுள்ள சுமார் 1545 தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்காக ரூ.33.56 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக எம்.எல்.ஏ-வின் விருந்தில் 100 கெடா வெட்டி, ..10 கோடி ரூபாய் மொய் வசூல் !