Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி ஸ்ப்ரேவை செண்ட் என அடித்து விளையாடிய சிறுவர்கள்! புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick
செவ்வாய், 25 பிப்ரவரி 2025 (13:25 IST)

புதுக்கோட்டையில் வாசனை திரவியம் என நினைத்து எலி ஸ்ப்ரேவை வைத்து விளையாடிய சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்த ரிஷிகேஸ் (6), ரித்திக் (6), கருப்பசாமி (5), தனபிரியன் (5) ஆகிய நான்கு சிறுவர்கள் பள்ளி முடிந்து ஒரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். 

 

அப்போது அப்பகுதியில் கிடந்த எலி ஸ்ப்ரே ஒன்றை எடுத்து அவர்கள் விளையாடியுள்ளனர். ஸ்ப்ரேவை முகத்திலும் வாயிலும் அடித்து அவர்கள் விளையாடியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக சிறுவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்

 

தற்போது சிறுவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எலி விஷம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் அல்லது ஒருவாரம் சிறுவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். வயிற்றுக்குள் எலிவிஷம் சென்றிருந்தால் கல்லீரல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சிறுவர்கள் கைகளில் இந்த பொருட்கள் கிடைக்காத வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழிங்க பார்ப்போம்… திமுகவினருக்கு எச். ராஜா சவால்…!

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

அடுத்த கட்டுரையில்
Show comments