Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமைச் செயலகத்தில் பரபரப்பு – மோப்ப நாய்கள் வைத்து வெடிகுண்டு சோதனை !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (14:02 IST)
தலைமைச் செயலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதை அடுத்து இன்று காலை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் அதிகரித்துள்ளது. அசாமில் முதல்வர் வீடு தாக்கப்பட்டதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வந்த சென்னை காவல் கட்டுப்பாட்டு ஆணையத்துகு வந்த தொலைபேசி அழைப்பில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்வர், துணை முதல்வர் வீடுகளில் சோதனை நடத்தினர். அதையடுத்து இன்று காலை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பு கோவையில் இருந்து வந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments