Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பரபரப்பில் மிதந்த போயஸ் கார்டன்

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (09:20 IST)
போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிற்கும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
நேற்று மாலை சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிலும் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
 
இதனால் ஆடிப்போன போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் போயஸ் கார்டனுக்கு விரைந்து ஜெயலலிதாவின் வீட்டிலும், ரஜினிகாந்தின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் வெடுகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
 
இதையடுத்து போலீஸார் மர்மநபர் அழைத்த நம்பரை டிரேஸ் செய்தபோது அது கோவையில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை போலீஸார் இதுகுறித்து கோவை போலீஸை அணுக அவர்கள் மிரட்டல் விடுத்த முகமது என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். மன அழுத்தத்தால் இப்படி செய்துவிட்டதாக அந்த வாலிபர் கூறியிருக்கிறார். இச்சம்பவத்தால் சற்று நேரம் போயஸ் கார்டன் உச்சகட்ட பரபரப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments