Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (09:27 IST)
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடிகள் உடைந்து வரும் நிலையில் பயணிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் ஒன்று இன்று காலை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை விமான நிலையம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது வெற்று மிரட்டல் என்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் என்பதும், சாப்ட்வேர் எஞ்சினியர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments