Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (09:27 IST)
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது கண்ணாடிகள் உடைந்து வரும் நிலையில் பயணிகள் ஒருவித அச்சத்துடனே சென்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் ஒன்று இன்று காலை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை விமான நிலையம் முழுவதிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்தனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் இது வெற்று மிரட்டல் என்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பள்ளிக்கரணையை சேர்ந்தவர்கள் என்பதும், சாப்ட்வேர் எஞ்சினியர்கள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments