Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:30 IST)
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள அழகம்மன் கோவிலில் கடந்த 26ம் தேதி சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அங்கு சென்ற சிலர், அருகேயுள்ள மணப்பாடு கடற்கரைக்கு சென்று, படகு சவாரி செய்ய விரும்பினர்.


 

 
இதற்காக ஒரு மீன்பிடி விசைப்படகில் 20 பேர் ஏறி சென்றனர். கடற்கரையிலிருந்து  சுமார் 1 கி.மீ தூரம் சென்ற போது, திடீரெனெ எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு தடுமாறி கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழிந்து தத்தளித்தனர். இது கேள்விப்பட்டு, கடற்கரையிலிருந்து சிலர் படகில் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 19 பேரை மீட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
 
அதில் சிகிச்சை பலன்றி ஏற்கனவே 9 பேர் இறந்துவிட்டனர். மற்ற அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.   இந்நிலையில்  அதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
 
அளவுக்கு அதிகமானோர் அந்த படகில் ஏறியதும், அனைவரும் ஒரே பகுதியில் நின்று கொண்டிருந்ததாலும், திடீரென எழுந்த ராட்சத அலை காரணமாக படகின் சுமை ஒரு பக்கமாக அதிகரித்து கவிழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments