யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:46 IST)
யூத் ரெட் கிராஸ் சார்பில் கரூர் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)யில் இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்,  50 மாணவ மாணவியர்கள் தங்களது இரத்தத்தைத் தானமாக வழங்கினர்.

இரத்ததான முகாமை கல்லூரி முதல்வர் முனைவர் சு.கெளசல்யாதேவி தொடங்கி வைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் கரூர் மாவட்டத் தலைவர் என்ஜினியர் இராமநாதன் இந்தியன் ரெட் கிராஸ் கரூர் மாவட்டச் செயலர் வில்லியம்ஸ் திருமூர்த்தி ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

தானமாகப் பெறப்பட்ட இரத்தத்தை உதவிப் பேராசிரியர் மற்றும் மருத்துவர் அறிவழகன் தலைமையில் வந்த குழுவினர் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். முகாம் ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் இரா.லட்சுமணசிங் செய்தார். இரத்ததானம் வழங்கிய தன்னார்வத் தொண்டர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments