Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்பு பூஞ்சை தொற்று நோயையும் அரசு காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள்… ஓபிஎஸ் வேண்டுகோள்!

Webdunia
சனி, 29 மே 2021 (08:50 IST)
தமிழகத்தில் அதிகமாக பரவும் கருப்பு பூஞ்சை தொற்றை தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் இந்த பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சையையும் தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சியை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.. சர்ச்சையை ஆரம்பித்த செல்வப்பெருந்தகை..!

இந்திய பங்குச்சந்தை இன்றும் ஏற்றம்.. பிரதமரின் பிரிட்டன் பயணத்தால் உச்சம் செல்லுமா?

காட்டுக்குள் உல்லாசம்..! தேடி வந்த கணவன் ஷாக்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்!

ஒரே வாரத்தில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு..!

பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்.. விஸ்கி விலை குறைய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments