Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

Mahendran
வியாழன், 20 பிப்ரவரி 2025 (18:35 IST)
தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிப்ரவரி 25ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அவர் கோவையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மேலும், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதாகவும், 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வரும் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
 
இது குறித்து செல்ல செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசியும், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக, பிப்ரவரி 25ஆம் தேதி கோவைக்கு வருகை தரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக எனது தலைமையில் மாபெரும் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்."

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

சீமான் ஒரு கிணற்று தவளை: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கண்டனம்..!

டெஸ்லா காரை ஓட்டி பார்த்த துணை முதல்வர்.. ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ வைரல்..!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments