பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (13:44 IST)
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி ராணுவ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் திட்டத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திமுகவினர் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் யோசனைக்கு பாஜக தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments