Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சப்போவதில்லை- வானதி சீனிவாசன்

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (13:03 IST)
சமீபத்தில் சென்னை, பனையூரில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் பாஜகவின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியக் கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு அங்குள்ள  இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கண்டித்து பாஜகவினர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இக்கொடிக் கம்பத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கோவை மாநகர் மாவட்ட தலைவர்  பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் மாநில துணை தலைவர் கனகசபாபதி இருவரும் மசக்காளி பாளையத்தில் பாஜக கொடியை ஏற்றச் சென்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில்,

‘’தமிழக பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக அரசு கோவை மாவட்டம் மசக்காளி பாளையத்தில் பாஜக கொடியை ஏற்ற சென்ற கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி அவர்கள் மற்றும் மாநில துணை தலைவர் திரு  கனகசபாபதி அவர்களையும் கட்சி தொண்டர்களையும் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த மிரட்டலுக்கு எல்லாம் பாஜகவினர் அஞ்சப்போவதில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments