Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

Mahendran
சனி, 21 டிசம்பர் 2024 (08:47 IST)
கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதாகவும், அவருடன் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்பட 2000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவை குண்டு வெடிப்புக்கு காரணமான பாட்ஷா என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததை கண்டித்து பாஜக சார்பில் கோவையில் கண்டன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், இந்த பேரணி சிவானந்தா காலனி வழியாக செல்ல திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், காந்திபுரம் சிக்னலை பேரணி கடக்க முயன்ற போது, தடையை மீறி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட சுமார் 2000 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை கைதுக்கு தமிழக பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments