Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமகவை இரண்டாக உடைத்தது பாஜக தான்.. இன்னும் சில கட்சிகள் உடையும்: பத்திரிகையாளர் மணி

Siva
வெள்ளி, 30 மே 2025 (09:19 IST)
பாட்டாளி மக்கள் கட்சியை இரண்டாக உடைத்தது பாஜக தான் என்றும், கடந்த 2024 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் விரும்பினார். நள்ளிரவு 12 மணி வரைக்கும் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென காலையில் பாஜகவுடன் கூட்டணி என அன்புமணி அறிவித்தார். அப்போது தான் முதல்  மோதல் தொடங்கியது.
 
அன்புமணிக்கு பாஜக கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் அன்றைய தினம் கூட்டணி நடந்தது. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருந்தால், கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்கு குறைந்தது எட்டு தொகுதிகள் கிடைத்திருக்கும் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
 
பிற மாநிலங்களில் மாநில கட்சிகளை உடைக்கும் வேலையை செய்து வந்த பாஜக, தற்போது முதல் முறையாக தமிழ்நாட்டில் பாமக என்ற கட்சியை உடைத்துள்ளது என்றும், இது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி, தங்களுடன் இணையாத இன்னும் சில கட்சிகளையும் பாஜக உடைக்க தயங்காது என்றும், எனவே அரசியல் கட்சிகள் பாஜகவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments