Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ் யா? பாஜக பிரமுகர் டுவிட்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:08 IST)
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென கார் வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பான நிலையில் இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு உள்பட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர்
 
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கோவையில்  நேற்று முன் தினம் நடந்த மாருதி கார் வெடிப்பில் தொடர்புடையவர்களாக முகம்மது தல்கா, முகம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், ஃ பிரோஸ் இஸ்மாயில், முகம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது. 
 
இப்போது வரை இது சிலிண்டர் வெடித்த வழக்காகவே கருதப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விரைந்து செயல்பட்டு ஐந்து பேரை கைது செய்த காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிற அதே வேளையில், இதன் பின்னணியில் ஐ எஸ் ஐ எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கங்கள் உள்ளனவா என்பதையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments