Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கவர்னரை திடீரென சந்தித்த பாஜக எம்.எல்.ஏக்கள்: என்ன காரணம்?

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (17:05 IST)
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் திடீரென தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று நீட் தேர்வு குறித்து ஆவேசமாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்த நிலையில் அது குறித்து தமிழக கவர்னரிடம் மனு அளிக்க பாஜக எம்எல்ஏக்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று சந்தித்துள்ளனர். பாஜக எம்.எல்.ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் சற்றுமுன் ஆளுநரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் பாஜக மாநில தலைவர் எல் முருகன் பொதுச் செயலாளர் கேடி ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆளுனரை சந்தித்தபின் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments