Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க பாஜக கோரிக்கை!

இவர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க பாஜக கோரிக்கை!
, வியாழன், 20 மே 2021 (21:02 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் கொரோனா வைரஸை பாதிப்பு கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் தெரிந்ததே
 
ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது தமிழக அரசுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பத்திரிகையாளர் உள்பட பலரையும் முன்கள பணியாளர்களாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது சிலிண்டர் எரிவாயு விநியோகம் செய்பவர்களையும் முன்கள பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மிகவும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட , சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வீட்டிலயே வந்து விநியோகம் செய்யும் பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்கும் படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதனிகளுக்குச் சவுக்கடி கொடுத்த கேரள முதல்வருக்கு வாழ்த்துக்கள்: திருமாவளவன்