Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம், சிவகுமாரை செஞ்சு விட்டாச்சு, அடுத்து யார்? க்ளூ கொடுத்த எச்.ராஜா!

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:19 IST)
ப.சிதம்பரம், கர்நாடகாவில் டிகே சிவக்குமார் ஆகியோரின் கைதை தொடர்ந்து யார் கைது செய்யப்படுவார் என எச்.ராஜா க்ளூ கொடுத்துள்ளார்.
 
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
அதனைத்தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் கே சிவக்குமாரை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சியினர் அடுத்தடுத்து கைதானது பரபரப்பாக பேசப்பட்டது. 
இந்நிலையில், இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசினர். அவர் கூறியதாவது, ப.சிதம்பரம், டிகே சிவகுமார் ஆகியோர் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகள். ஊழல் செய்தே இப்படி சொத்துக்களை சேர்த்தனர். அதனால்தான் கைதாகி உள்ளனர். 
 
இப்படித்தான், தமிழ்நாட்டில் கல்லூரி நடத்தி வரும் ஒருவர் ரூ.42 கோடி அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார். அவரும் சீக்கிரமாகவே கைது செய்யப்படுவார் என்றார். இப்போது யார் அந்த நபர் என்பதுதான் பெரும் பேச்சாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments