Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கமா வாள்தானே குடுப்பீங்க.. இப்ப என்ன துப்பாக்கி? – மதுரையில் பாஜகவினரால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (11:25 IST)
மதுரையில் நடந்த பாஜக விழா ஒன்றில் இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கி வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புறநகர் மாவட்டம் புதிய இளைஞரணி கூட்டம் திருப்பாலையில் உள்ள பள்ளி ஒன்றில் நடைபெற்றுள்ளது. அதில் பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மதுரையை சேர்ந்த தேவகிரி சல்கா என்பவர் துப்பாக்கி ஒன்றை மேடையில் பரிசாக அளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவகிரி சல்கா மதுரையில் அரசு அனுமதியுடன் ஏர்கன் தயாரிப்பவர் என்றும், பாதரச குண்டுகளை பயன்படுத்த கூடிய ஏர்கன் வகை துப்பாக்கியையே சல்கா வழங்கியதாகவும் அது நிஜ துப்பாக்கி அல்ல என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற கட்சி விழாக்களில் வாள் வழங்கப்படும். அதற்கு பதிலாக பாஜகவினர் ஏர்கன் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments