Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் விசிட்! – சூடுபிடிக்கிறதா தேர்தல்!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (12:16 IST)
பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்துள்ள நிலையில் அடுத்து மீண்டும் இந்த மாதத்தில் அவர் தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதற்காக போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜக கூட்டம் ஒன்றிற்காக பிரதமர் மோடி மீண்டும் இதே மாதம் 25ம் தேதி கோயம்புத்தூர் வர உள்ளதாக பாஜக மேலிட தலைவர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். மேலும் பிப்ரவரி 21ல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சேலத்திற்கும், பிப்ரவரி 19ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னைக்கும் வருகை தர உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து தமிழகம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments