Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டு கொடுத்து நோட்டாவுடன் வெற்றி: திமுகவை வம்புக்கு இழுக்கும் தமிழிசை

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (16:33 IST)
தமிழகத்தில் தாமரையை மலரவைக்க தமிழக பாஜக தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆனால் தாமரை மலர்வதற்கான எந்த அறிகுறியும் இதுவரைத் தெரியவில்லை. 
 
இந்நிலையில் தனது பலத்தை தமிழகத்தில் அதிகரிக்க கூட்டணி எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது பாஜக. அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கென்று சில எம்.பி.களை தமிழகத்தில் உருவாக்கிக்கொள்ள பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியது பின்வருமாறு, 
 
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார். பாஜக நோட்டாவுடன்தான் போட்டி போடும். அவர்கள் மட்டும் நோட்டாவுடன் போட்டி போடக் கூடாது என்று பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து இருக்கிறார்கள் என்று தலைவர் வீரமணி பேசியுள்ளார். 
தேர்தலையே சந்திக்காத வீரமணி இதை பேசுவதற்கு தகுதியற்றவர். திமுக ஆர்.கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் திமுக டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா? 
 
நோட்டு கொடுத்து நோட்டாக்கு மேல் வாக்குகளை பெறுவது பெருமை அல்ல. இதே திமுக ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது என்பதை வீரமணி அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும் என கடுப்பாக பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர், இதில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை

கொல்கத்தா ஐஐடி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்.. குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

ஒரே பெண்ணை மணந்த இரு சகோதரர்கள்.. பாரம்பர்ய சடங்குடன் நடத்தி வைத்த பெரியோர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments