Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட வேண்டும் - பாஜக தலைவர்

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (14:15 IST)
கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்  (CCA) நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள், பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது பொதுச் சொத்துக்களை சிலர் சேதப்படுத்தினர். இந்நிலையில், மேற்குவங்க பாஜக தலைவர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் சுடுவோம் எனப் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் CCA வுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில்  அம்மாநிலத்தில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். அங்கு சிலர் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
 
 இந்நிலையில், CCA க்கு ஆதரவு தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் அதியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ்  கலந்து கொண்டு பேசினார்.
 
அப்பொது அவர் கூறியதாவது : மேற்கு வங்கத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது மமதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுச் சொத்துகளை யாராவது சேதப்படுத்தினால் சுட்டு வீழத்துவோம் என பேசியுள்ளார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜய்.. ஒருநாள் நோன்பு இருப்பதாக தகவல்..!

தமிழகத்தில் மும்மொழி கொள்கை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த பாஜக..!

தகுதியானவர்களுக்கு மட்டும் மகளிர் உதவித்தொகை.. திமுக அரசு போலவே டெல்லி பாஜக அரசு அறிவிப்பு..!

மோடியின் அமெரிக்க பயணத்தில் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை: RTI பதில்..!

வரி செலுத்துவோரின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் அரசு?! - புதிய சட்டத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments