எச் ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு.. சொந்த ஜாமீனில் விடுவிப்பு..!

Mahendran
திங்கள், 2 டிசம்பர் 2024 (12:22 IST)

பாஜக பிரமுகர் எச். ராஜாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆன தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பெரியார் சிலையை உடைப்பேன் என்று பேசிய வழக்கிலும், திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்கிலும், இரண்டு வழக்குகளில் எச். ராஜா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டது. இந்த இரண்டு பதிவுகளும் அவருடைய எக்ஸ் தலை பக்கத்திலிருந்து வெளியானவை என்று நிரூபிக்கப்பட்டது.

இதனை அடுத்து, இரு வழக்குகளிலும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று எச். ராஜா கோரியதற்கமைய, அவர் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக, அவருடைய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments