பாஜக இந்துக்களுக்கான அரசு என்பது மிகப்பெரிய பொய்.. ஜோதிமணி காட்டம்

Mahendran
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:43 IST)
பாஜக இந்துக்களக்கான அரசு என்பது மிகப் பெரிய பொய் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.  
 
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இன்று  அரவக்குறிச்சி அருகே புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கோவில் கும்பாபிஷேக விழாவை அரசியல் கட்சி கூட்டம் போல் இந்தியாவில் யாரும் நடத்த முடியாது என்றும் கோயில் குடமுழுத்து விழாவுக்கு என ஆகம விதிமுறைகள் உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
கோவிலை முழுமையாக கட்டி முடித்த பிறகு கோவில் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது ஆகம விதிமுறை என்றும் அவர் கூறினார். மேலும் இந்தியாவின் குடியரசு தலைவராக இருக்கும் திரௌபதி முர்மு அவர்கள் ஒரு இந்து. ஆனால் அவர் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்கப்படவில்லை அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு அழைக்கப்படவில்லை
 
அவர் ஒரு இந்துவாக இருந்தும் பாஜக ஏன் புறக்கணிக்கிறது? இந்துக்களுக்கான அரசு என்று கூறுவது ஒரு மிகப்பெரிய பொய் என்பது எதிலிருந்து தெரிய வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments