ஹிஜாப் பிரச்சினை எழுந்த வார்டில் பாஜகவுக்கு 10 ஓட்டு! – வெற்றி பெற்றது யார்?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (13:02 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது ஹிஜாப் பிரச்சினை எழுந்த மேலூர் 8வது வார்டில் பாஜக 10 ஓட்டுகள் பெற்றுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாதக, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக மதுரை, மேலூர் நகராட்சியில் 8வது வார்டு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து பாஜக பூத் ஏஜெண்ட் கிரிராஜன் பிரச்சினை செய்ததால் வெளியேற்றப்பட்டார். இந்த வார்டின் வாக்கு எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில் அதில் பாஜக 10 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments