Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு 22 தொகுதிகள்... ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒப்புதல்!

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (10:32 IST)
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல். 

 
தமிழகத்தில் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அதிமுக கூட்டணி பாஜக தொடர்கிறது என இரு கட்சிகளும் பரஸ்பரம் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் சட்டப்பேரவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. 
 
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல்வர், துணை முதல்வரை தனித்தனியே சந்தித்து பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments