Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அபின் கடத்திய அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கம்: பாஜக அதிரடி

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (17:45 IST)
பாஜக கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணை தலைவரும், ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினருமான அடைக்கலராஜ் என்பவர் உள்பட ஐந்து பேர் அபின் கடத்தல் வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டதாக வெளிவந்த தகவல் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
கரு நாகராஜ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்ட அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் அவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார். எனவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது. 
 
இவ்வாறு கரு.நாகராஜ் அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments