Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை கண்ணனை கைது செய்ய காவல்துறையில் புகார்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (21:08 IST)
காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த நெல்லைகண்ணன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்ய வேண்டும் என தூண்டியதை கண்டித்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் பொதுச்செயலாளர் நரேந்திரன் தலைமையில் தமிழக கூடுதல் இயக்குனரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். 
 
முன்னதாக நெல்லை கண்ணன் இஸ்லாம் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவை கொலை செய்ய வேண்டும் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழர் வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன், எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு கட்சியின் தலைவர் முன்னிலையில் நெல்லை கண்ணன் இவ்வாறு பேசியதை ஒருவர் கூட கண்டிக்கவில்லை என்பதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments