Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டயரு கியருனு பேசிட்டு பொசுக்குனு அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!!

டயரு கியருனு பேசிட்டு பொசுக்குனு அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!!
, திங்கள், 21 டிசம்பர் 2020 (13:33 IST)
உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் என அண்ணாமலை டிவிட்டர் பதிவு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து அதிமுகவை விமர்சிக்கும் வகையில் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் நேற்று பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் துணை தலைவர் அண்ணாமலை ”தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் என வழங்குவதுதான் தமிழக அரசியல். 
 
இந்த தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தலைக்கு மேல் லைட் வைத்து செல்பவர்களும், டயருக்கு கீழ் விழுந்து கும்பிடு போடுபவர்களும்தான் ஆட்சிக்கு வருவார்கள் என பேசியுள்ளார். இது மறைமுகமாக அதிமுக பிரமுகர்களை தாக்கும்படி உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்தது.
 
இதனால் இப்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை. அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் நேரத்தில் ரூ.2,000-த்தை ஓட்டுக்காக வழங்குவதையே நான் குறிப்பிட்டு பேசினேன். ஆனால் நான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் ரூ.2,500 குறிப்பிட்டதாக தவறாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. உண்மை என்றும் புரிய வேண்டும், பொய்கள் யாவும் அழிய வேண்டும் என டிவிட்டர் பதிவு போட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசு: இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர்!