Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகிகள் திடீர் அதிருப்தி.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (17:27 IST)
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சை வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில் அவர் மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் அவர் தற்போது தொகுதி முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் இருக்கும் நிலையில் ஆங்காங்கே அந்தந்த தொகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு அவர்கள் வாக்கு சேகரிக்காமல் ஒட்டுமொத்த ஆதரவாளர்கள் அனைவரும் ராமநாதபுரத்தில் குவிந்து விட்டதாகவும் அங்கு அவர்கள் ஓ பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தேர்தல் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாஜக வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ராமநாதபுரத்திற்கு சென்று விட்டதை அடைந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இது குறித்து ஓபிஎஸ் அவர்களிடமும் பேசியதாகவும் தெரிகிறது. ஓபிஎஸ் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஓபிஎஸ் மீது பாஜக நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகவும் தேர்தல் முடிந்த பிறகு இந்த அதிருப்தி கோபமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!

தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!

திமுக அரசின் சாயம் வெளுக்கிறது.. விஜய் கட்சி நிர்வாகி நடிகர் ராஜ்மோகன் அறிக்கை..!

எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments