Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணி முறிவு; எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு? – மர்ம நபர்கள் செயலால் பரபரப்பு!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (11:36 IST)
சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு முதலாக பாஜக – அதிமுக கூட்டணியில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அதிமுக. அதை தொடர்ந்து அதிமுகவினர் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்துள்ள இந்த சமயத்தில் இந்த செயலை பாஜகவினர் செய்திருக்க கூடும் என அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments