Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய 5 பைசாவுக்கு பிரியாணி..முந்தியடித்த மக்கள் !

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (19:37 IST)
கடந்தாண்டு கொரொனா தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கொரொனா இரண்டாம் அலை தொற்று வேகமாகப் பரவிப் பின்னர் குறைந்த நிலையில் தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மதுரைவில் பழைய 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படுமென ஒரு புதிய திறப்பு விழாவுக்கு வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இதையடுத்து, மக்கள் பழைய 5 பைசாவுடன் வந்து குவிந்தனர். இதனால் கடைக்காரர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படவே கடைக்கார்கள் ஷட்டரை இழுத்து மூடிவிட்டனர்.
விரைவில் 3 ஆம் அலைப் பரவல் தொடங்கவுள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் இப்படி சமூக இடைவெளியின்றி மக்கள் கூடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments