Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப அட்டையில் உள்ள எல்லோரும் கைரேகை பதிவு செய்யவேண்டும்.. இல்லாவிட்டால் பெயர் நீக்கம்?

Mahendran
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:25 IST)
குடும்ப அட்டை மூலம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைரேகை பதிவு செய்தால் போதும் என்ற நிலையில் தற்போது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவை உறுதி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடும்ப அட்டையில் இருந்து கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறிய போது வங்கிகளில் கேஒய்சி என்பது உறுதி செய்யப்பட்டு வருவதை போல் ஒவ்வொரு ரேஷன் கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் உள்ள பெயர் அட்டை எண் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது

இதன் படி இந்த மாதத்தில் பொருள் வாங்க வருபவர்களிடம், அட்டையில் உள்ள அனைவரும் தங்களது விரல் ரேகையை வந்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கைரேகை பதிவிட வராவிட்டால் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பெயர் நீக்கப்படும் என்றும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments