Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டில் வளைத்து வளைத்து பைக்குகள் பறிமுதல்..

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (11:37 IST)
புத்தாண்டு கொண்டாட்டத்தில் அதிவேகமாக ஓட்டிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்களின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புத்தாண்டு வந்தாலே கொண்டாட்டங்கள் கலைகட்டும் வேளையில் பல இளைஞர்கள் கொண்ட்டாட்டம் என்ற பெயரில் அதிவேகமாக பைக் ஓட்டி செல்வது வழக்கமாக காணப்படும் ஒன்று. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பைக் ரேஸிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பல விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் புத்தாண்டையொட்டி சென்னையின் பல பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அதிவேகமாக சென்ற 100க்கும் மேற்பட்ட இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட பைக்குகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாத குழந்தையை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்! ராட்வெய்லரை தடை செய்ய கோரிக்கை!

ஒரே தண்டவாளத்தில் வந்த 2 மின்சார ரயில்கள்.. சென்னையில் பரபரப்பு..!

திருப்பதி கோவிலுக்கு டிரோன் எதிர்ப்பு வான் பாதுகாப்பு சாதனம்: தேவஸ்தானம் முடிவு..!

பஹல்காம் பகுதியை ’இந்து சுற்றுலா தலம்’ என அறிவிக்க கோரிய மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

விஜய் தனித்து போட்டியிடுவது அவருக்கு நல்லது: எச் ராஜா அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments