Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிள் சின்னம் கோரி ஜி.கே வாசன் மனு..! தேர்தல் ஆணையும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (11:44 IST)
மக்களவை பொதுத்தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி அதன் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும், பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக மனுவில் தெரிவித்து இருந்தார்.
 
2019ம் ஆண்டு பொதுத்தேர்தலை போல இந்த தேர்தலுக்கும்  தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுவில் ஜி.கே வாசன் கோரிக்கை  விடுத்திருந்தார்.

ALSO READ: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..! 82 புதிய அறிவிப்புகள் வெளியீடு..!!
 
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரிய ஜி.கே வாசன் மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு தள்ளி வைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments