சீமான் எங்கள் கூட்டணியில் இணையலாம்: கரும்பு விவசாயி சின்னம் பெற்ற கட்சி அழைப்பு..!

Mahendran
வெள்ளி, 15 மார்ச் 2024 (12:51 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சி எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடலாம் என கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சியின் தமிழக தலைவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி என்ற சின்னம் இந்த முறை பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் பேசிய இக்கட்சியின் தலைவர் ஜெயக்குமார் என்பவர் ’நாங்கள் கட்சி தொடங்கி மூன்று மாதங்களே ஆனபோதிலும் தமிழக மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் 
 
 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுமானால் எங்களுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடலாம், அவ்வாறு போட்டியிட்டால் அவருக்கும் கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அவரது இந்த அழைப்பு சீமான் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments