Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பீட்டா மனுதாக்கல்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:41 IST)
ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
ஜல்லிக்கட்டு குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் சட்டத்தை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
 
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்றும் நீதியை தவறவிட்டு உள்ளது என்றும் பீட்டா அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் பார்த்த விரிவான ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றம் பரிசீலிக்க தவறிவிட்டது என்றும் பீட்டா அமைப்பு கூறியுள்ளது. 
 
இதனை அடுத்து ஜல்லிக்கட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மீண்டும் பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments