Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:24 IST)
பவானியில் சிறுமியை திருமணம் செய்த கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அப்புசாமி. இவர் கடந்த 7 மாதத்திற்கும் முன்னதாக 18 வயது பூர்த்தியடையாத தனது மகளை காமராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஏற்கனவே அஜித் என்ற நபரை அந்த பெண் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அஜித்தை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் இருவரும் காவல் நிலையத்தில் அடைக்கலம் கேட்டு சென்றுள்ளனர்.

விசாரணையில் மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வர கணவன் காமராஜ், காதலன் அஜித், பெண்ணின் பெற்றோர்கள், காமராஜின் பெற்றோர்கள் என மொத்தம் 6 பேரை போலீஸார் போக்சோ மற்றும் குழந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments