Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்ட ஊழல்; சஞ்சய் ராவத்திற்கு காவல் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (22:35 IST)
சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் என்பவர் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கான காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் ரூ.1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ள  வழக்கில் சிவசேனா தலைமைச் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பியின் நெருக்கிய தொடர்பில் இருந் பிரவின் ராவத்தை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை கைது செய்தனர்.

இம்முறைகேடு சம்பந்தமாக நடந்த பணப்பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில்,  நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே சஞ்சய் ராவத்திற்கு வரும் ஆகஸ்ட் 22 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

.இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றம் இன்று சய்சய் ராவத் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி, அவருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

க்ரீன் கார்டு வைத்திருந்தாலும் வெளியேற்றலாம்.. அமெரிக்க நீதிமன்ற உத்தரவால் இந்தியர்கள் அதிர்ச்சி..!

தொடர் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம்.. இன்றைய சென்னை நிலவரம்..!

டாடா, அம்பானி கூட செய்யாத சாதனை.. ஒரே நேரத்தில் 50000 ஊழியர்களுக்கு பதவி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments