Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் அரையிறுதியில் நுழைந்த பரணி வித்யாலயா

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (16:59 IST)
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசியளவிலான ஏரோபிக்ஸ் போட்டிகள் தில்லி அருகிலுள்ள குர்கானில் நடைபெற்று வருகின்றன. கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டியானது வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க கரூர் பரணி வித்யாலயாவைச் சேர்ந்த ஹேமந்த், தர்ஷனா, தீக்சிதா, அஷ்மிதா, ஜஷ்மிதா, செல்சியா கேத்தரின், சமிதா, சஷ்டிகா, தேஜஸ்வினி, ராஜேஸ்வரி, நிஷிதா, கீர்த்தனா, பிரியதர்ஷினி, தனுஸ்ரீ ஆகிய 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கால் இறுதிக்கு தகுதி பெற்று, தற்போது  இன்று அந்த குழு அரையிறுதிக்கு தகுதி பெற்று விளையாடி வருகின்றனர்.



இந்த இசையோடு விளையாடும் இந்த ஏரோ பிக்ஸ் விளையாட்டினை காண, புதுடெல்லியை அடுத்த குர்கானில் பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். 25 ம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது என்று கொங்கு சகோதய பள்ளி முதல்வர்களின் கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு சி.பி.எஸ்.இ பள்ளிகளின் முதல்வர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான முனைவர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments