Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்.. வங்கியில் லட்சக்கணக்கில் திருடிய காசாளர்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:40 IST)
ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக வங்கியில் லட்சக்கணக்கில் திருடிய காசாளர் ஒருவர் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் உள்ள வங்கியில் முகேஷ் என்பவர் காசாளராக பணிபுரிந்து வந்த நிலையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து அவர் வங்கியில் இருந்து 44 லட்சம் ரூபாய் பணத்தை திருடி திடீரென மாயமானதாக தகவல் வெளியானது. ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனுக்காக வங்கி பணத்தை எடுத்து அந்த கடனை கொடுத்துவிடலாம் என திட்டமிட்டு அவர் வங்கியில் திருடியதாக தெரிகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் காசாளர் முகேஷ் வங்கியில் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து தனது பையில் வைக்கும் சிசிடிவி காட்சி கண்டுபிடித்துள்ளனர்

இதனையடுத்து காசாளர் முகேஷை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு குற்றம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments