Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அறிவிப்பு..!

Mahendran
புதன், 12 பிப்ரவரி 2025 (15:52 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கடந்து செல்லும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என்று தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து இயக்க அனுமதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள், ஓட்டுனரின் பதிவு சான்றிதழை பரிசோதனை செய்து கொள்ளலாம். பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்கினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்