கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அறிவிப்பு..!

Mahendran
புதன், 12 பிப்ரவரி 2025 (15:52 IST)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கடந்து செல்லும்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன் காரணமாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என்று தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்கள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரில் இருந்து இயக்க அனுமதி பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள், ஓட்டுனரின் பதிவு சான்றிதழை பரிசோதனை செய்து கொள்ளலாம். பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களை இயக்கினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்